மம்தா பானர்ஜியின் தலைக்கு பரிசு அறிவித்த பாஜக பிரமுகர்.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் தலையை கொண்டு வருபவருக்கு 11 லட்சம் ரூபாய் பரிசு அளிப்பேன் என பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணித் தலைவர் ஒருவர் அறிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
யோகேஷ் வர்ஸ்னே என்ற அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். பிர்பும் மாவட்டத்தில், ஹனுமன் ஜெயந்தியையொட்டி நடத்தப்பட்ட பேரணியை தடியடி நடத்தி போலீசார் கலைத்தனர், இதற்கு கண்டனம் தெரிவித்து பேசிய யோகேஷ் வர்ஸ்னே, மம்தாவின் தலையை வெட்டிக் கொண்டு வருபவருக்கு 11 லட்சம் ரூபாய் அளிப்பேன் என கூறினார். மம்தா பானர்ஜி இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகவே செயல்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
கருத்துகள் இல்லை