எதிர்ப்பை மீறி நடத்தப்பட்ட வடகொரியா ஏவுகணை சோதனை தோல்வி.
எதிர்ப்பை மீறி நடத்தப்பட்ட வடகொரியா ஏவுகணை சோதனை தோல்வி அடைந்துள்ளது. ஐ.நா.சபை, அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா தலைநகர் பியாங்யாங்கை அடுத்த பக்சாங் என்ற இடத்தில் ஏவுகணை சோதனையை நடத்தியது. ஆனால் ஏவப்பட்ட சில விநாடிகளில் அது 71 கிலோமீட்டர் உயரத்துக்குச் சென்று வடகொரியாவிலேயே விழுந்துவிட்டதாக தென்கொரியாவின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவின் ஏவுகணை சோதனை தோல்வி அடைந்திருப்பது அந்த நாட்டுக்கு மோசமான நேரம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை