கேரளாவிற்கு கடத்த முயன்ற 10 கிலோ கஞ்சா பறிமுதல்.
கர்நாடக மாநிலத்தில் இருந்து கன்னியாகுமரி வழியாக, கேரளாவுக்கு ஆம்னி பேருந்தில் கடத்த முயற்சித்த 10 கிலோ கஞ்சாவை மதுவிலக்கு போலீஸார் பறிமுதல் செய்தனர்.
தமிழக – கேரளா எல்லைப் பகுதியான அமரவிளை சோதனை சாவடியில், கேரளா வணிகவரித் துறை மற்றும் மதுவிலக்கு போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கர்நாடக மாநிலத்திலிருந்து வந்த ஆரஞ்சு எனும் தனியார் நிறுவன ஆம்னி பேருந்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். சோதனையில், பேருந்தின் அடிப்பகுதியில் 10 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீஸார், பேருந்து ஓட்டுநர் மற்றும் உதவியாளரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை