சென்னையில் காவல் துறையினருக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
சென்னையில், காவல் துறையினருக்கு நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ. கே. விஸ்வநாதன் பரிசுகள் வழங்கினார்.
சென்னை காவல் மாவட்டங்களைச் சேர்ந்த காவலர்கள் முதல் ஆய்வாளர்கள் வரையில் உள்ளவர்களுக்கு, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் கடந்த ஒரு வாரமாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. கபடி, ஓட்டப்பந்தயம், கைப்பந்து உள்ளிட்ட போட்டிகள் இடம்பெற்றன. இதில் வெற்றி பெற்ற 450 பேருக்கு, சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ. கே. விஸ்வநாதன் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் பேசிய விஸ்வநாதன், விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதால், மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம் என்றார்.
விளையாட்டுகளில் தோல்வியுறும்போதுதான், வெற்றி பெறுவதற்கான ஆதங்கம் பிறக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை