கடலூரில் இளைஞரின் தலையை வெட்டி காவல் நிலையத்திற்குள் வீச்சு.
புதுச்சேரி யூனியன் பிரதேசம், பாகூர் அடுத்த குடியிருப்பு பாளையத்தை சேர்ந்தவர் சுவேதன். இவரை புதன்கிழமை இரவு அரிவாளால் வெட்டி படுகொலை செய்த மர்ம நபர்கள், தலையை மட்டும் தனியாக துண்டித்து எடுத்துள்ளனர். பின்னர் இந்த தலையை இருசக்கர வாகனத்தில் வைத்து கடலூர் நோக்கிச் சென்ற மர்ம நபர்கள் இருவர், ரெட்டிச்சாவடி காவல் நிலைய வாசலில் நின்று காவல் நிலையத்தை நோக்கி தலையை வீசிச் சென்றனர். இந்த காட்சி, காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
படுகொலை செய்யப்பட்ட சுவேதனின் உடற்பகுதி புதுச்சேரி பின்னாச்சிகுப்பத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உடலை கைப்பற்றிய புதுச்சேரி போலீஸார், உடற்கூறு ஆய்வுக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதேபோல், காவல் நிலையத்தில் வீசப்பட்ட தலையும் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குற்ற வழக்கு ஒன்றில், குற்றவாளிகளை அடையாளம் காட்டியதால் சுவேதன் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும், சுவேதனின் நண்பர்களே அவரை படுகொலை செய்திருக்கலாம் எனவும், முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது
கருத்துகள் இல்லை