பல இடங்களில் பேருந்துகள் இயங்காததால் பயணிகள் அவதி.
அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் ஒரு நாள் முன்னதாக இன்றே போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தத்தை தொடங்கி விட்டனர். சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் மந்தைவெளி, அடையாறு, தியாகராய நகர் உள்பட பல்வேறு இடங்களில் பேருந்துகள் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. திடீரென தொழிலாளர்கள் பேருந்துகளை இயக்காமல் தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கியதால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். வெளியூர் செல்ல முடியாமல் பேருந்து நிலையங்களில் பயணிகள் பரிதவித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை