அமித் ஷா அற்பத்தனமான அரசியல் செய்கிறார் – தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்.
பா.ஜ.க. தேசியதலைவர் அமித்ஷா, தெலுங்கானா மக்களை அவமானப்படுத்தி, அற்பத்தனமான அரசியல் செய்வதாக அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் குற்றம்சாட்டியுள்ளார்.
தெலுங்கானா மாநிலத்துக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் 20 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் நிதி வழங்கி வருவதாக அமித் ஷா கூறி இருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள சந்திரசேகர ராவ், அப்பட்டமான பொய்கள் மூலம் அமித் ஷா தங்களை தாக்குவதாகவும், இதற்காக அவர் தெலுங்கானா மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மத்திய அரசு 20 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தது உண்மை என்றால், அதில் 200 ரூபாய்க்கான ஆதாரத்தையாவது காட்ட முடியுமா? என்றும் சந்திரசேகர ராவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
கருத்துகள் இல்லை