ரூ.80 லட்சம் மதிப்பிலான ஓபியம் போதைப்பொருள் பறிமுதல் -8 பேர் கைது.
உத்தரபிரதேசத்தில் ரூபாய் 80-லட்சம் மதிப்பிலான ஓபியம் போதைப்பொருளை பதுக்கி வைத்திருந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர். ஷாம்பல் நகரில் போலீசார் நடத்திய வாகன சோதனையின்போது, ஓபியம் போதைப்பொருள் கடத்தியதாக இருவரை கைதுசெய்து விசாரணை நடத்தினர்.
அவர்கள் அளித்த தகவலின்பேரில் அங்குள்ள குடோனில் சோதனை நடத்திய போலீசார், அங்கு 120 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஓபியம் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். அதனை பதுக்கிய ஆறு பேரையும் கைதுசெய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை