கத்தாருடனான ராஜாங்க உறவைத் துண்டிப்பதாக சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு.
கத்தார் நாட்டுடனான உறவை நான்கு இஸ்லாமிய நாடுகள் துண்டித்துள்ளன.
கத்தார் தீவிரவாதவாதத்தை வளர்த்து வருவதாகக் கூறி, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, பெஹ்ரைன் ஆகிய நாடுகள் அந்நாட்டுடனான தூதரக ரீதியிலான உறவைத் துண்டித்துக்கொண்டுள்ளன. கத்தார் நாடு தனது உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதாக பெஹ்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.
கத்தார் தூதரக அதிகாரிகள் அடுத்த 48 மணி நேரத்திற்குள்ளாகவும், கத்தார் நாட்டு மக்கள் இரண்டுவார காலத்திற்குளாகவும் பெஹ்ரைனை விட்டு வெளியேறுமாறு அந்நாடு கெடு விதித்துள்ளது. அதன் பிறகு கத்தார் உடனான விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்தை நிறுத்திக்கொள்ளப்போவதாகவும் பெஹ்ரைன் அறிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை