மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கையில் முறைகேடு , சி.பி.ஐ.விசாரணைக்கு பரிந்துரைசெய்தார் கிரண்பேடி.
புதுச்சேரியில் மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கையில் முறைகேடு புகார்கள் வந்ததையடுத்து, சிபிஐ விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பரிந்துரைத்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கைதொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளதாகவும், இதில் மிகப்பெரிய அளவில் முறைகேடு, ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். மாணவர் சேர்க்கை தொடர்பாக தனியார்மருத்துவக்கல்லூரிகள் மற்றும் சென்டாக் அமைப்பின் செயல்பாடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த பரிந்துரைத்துள்ளதாகவும் கிரண்பேடி தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை