கத்தார் ஏர்வேஸ் ஸ்பான்சர் டிசர்ட் அணிந்தால் 15 ஆண்டுகள் சிறை.
சவுதி அரேபியாவில், கத்தார் ஏர்வேஸ் ஸ்பான்சர் செய்த கால்பந்தாட்ட அணி டிசர்ட்டை அணிபவர்களுக்கு 15 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஐஎஸ்ஐஎஸ், அல்கொய்தா போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு கத்தார் நிதி உதவி வழங்குவதாக குற்றம்சாட்டி, அந்நாட்டுடனான தூதரக உறவை துண்டித்துக்கொள்வதாக சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் அறிவித்தன. 2022ல் திட்டமிட்டபடி உலக கோப்பை கால்பந்து போட்டி, கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், பார்சிலோனிய கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை