தற்காலிக ஆசிரியர்களுக்கு இனி மாத ஊதியம் – அமைச்சர் செங்கோட்டையன்.
அரசு பள்ளிகளில் பணிபுரியும் 17 ஆயிரம் தற்காலிக ஆசிரியர்களுக்கு இனி மாத ஊதியம் வழங்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் அவர் பங்கேற்றார். பின்னர், செய்தியாளர்களுடன் பேசிய அவர், அரசு பள்ளிகளில் தற்காலிகமாக பணியாற்றும் 17 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, 3 மாதங்களுக்கு ஒருமுறை என்ற விகிதத்தில் சம்பளம் வழங்கப்படுகிறது என்றார். இந்த நடைமுறையை மாற்றி, அவர்களுக்கு இனி மாத ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை