தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கு வரவேற்பு குறைந்து வருகிறது.
பொறியியல் படிப்புகளுக்கு தமிழக மாணவர்களிடையே வரவேற்பு இல்லாததால், நடப்பாண்டில் விண்ணப்பித்தோர் எண்ணிக்கை 30 ஆயிரம் வரை குறைந்துள்ளது. மாணவர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த பொறியியல் படிப்பு, தற்போது புறக்கணிப்புக்கு ஆளாகிவருகிறது.
2013 ம் ஆண்டு 2 லட்சத்து 35 ஆயிரம் பேர் விண்ணப்பம் பெற்றிருந்த நிலையில், கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 84 ஆயிரமாகக் குறைந்தது. நடப்பாண்டில், மொத்தமே ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர்தான் விண்ணப்பித்துள்ளதால், கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் எண்ணிக்கை மேலும் குறைய வாய்ப்புள்ளது. தகவல் தொழில்நுட்பத்துறையில் ஆட்குறைப்பு, குறைவான ஊதியம் போன்ற காரணங்களால் பொறியியல் படிப்புக்கு ஆர்வம் குறைந்து வருவதாக கல்வியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
கருத்துகள் இல்லை