திருப்பதி கோயிலில் பாதுகாவலரால் தாக்கப்பட்ட பக்தர் உயிரிழப்பு.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பாதுகாவலர்கள் தாக்கியதில், கோமா நிலையிலிருந்த ஆந்திர பக்தர் 98 நாட்களுக்குப் பின்னர், உயிரிழந்தார்.
ஏலூரு கிராமத்தைச் சேர்ந்த பத்மநாபம் மார்ச் 21-ம் தேதி குடும்பத்துடன் ஏழுமலையான் கோயிலுக்குச் சென்றார். சர்வ தரிசன வழியில், உடைமைகளை ஸ்கேன் செய்யும்போது பாதுகாவலர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாவலர்களின் தாக்குதலில் மயக்கமடைந்த பத்மநாபம், திருப்பதி தேவஸ்தான மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார்.
கருத்துகள் இல்லை