தமிழகம் மற்றும் புதுவையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.
தென்மேற்கு பருவமழையின் தாக்கத்தால் கோவை மற்றும் நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் குறைந்த பட்சமாக 29 டிகிரி செல்சியசும் அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியசும் வெப்பநிலை நிலவும் என்றும் கூறப்பட்டுளது.
கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் வால்பாறையில் 17 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.
கருத்துகள் இல்லை