லாலு பிரசாத் மற்றும் குடும்பத்தினர் தொடர்புடைய 12 இடங்களில் சி.பி.ஐ சோதனை
ரயில்வே உணவக டெண்டர் முறைகேடு தொடர்பாக லாலு பிரசாத் குடும்பத்தினர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து 12 இடங்களில் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
ராஷ்டிரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் ரயில்வே துறை அமைச்சராக இருந்த போது கடந்த 2006 ஆண்டு ராஞ்சி மற்றும் பூரியில் ஐ.ஆர்.சி.டி.சி. எனப்படும் இந்திய ரயில்வேயின் உணவக மற்றும் சுற்றுலா கழகத்துக்கு சொந்தமான உணவகங்களின் பராமரிப்பு மற்றும் செயல்பாடுகள் தொடர்பான டெண்டர்களை தனியர் ஓட்டல் நிர்வாகங்களுக்கு கொடுத்ததில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி, அவர்களின் மகனும் பீகார் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ், மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி.யின் அப்போதைய நிர்வாக இயக்குநர் தனியார் ஓட்டல் நிறுவனங்களின் இயக்குநர்கள் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. இதனை தொடர்ந்து பாட்னாவில் உள்ள லாலுபிரசாத் குடும்பத்தினரின் வீடுகள் ஐ.ஆர்.சி.டி.சி. முன்னாள் நிர்வாக இயக்குநர் வீடு உட்பட டெல்லி, பாட்னா, ராஞ்சி, குர்கான் உள்ளிட்ட 12 இடங்களில் இன்று காலை முதல் சி.பி.ஐ சோதனை நடைபெற்று வருகிறது.
கருத்துகள் இல்லை