கிரண்பேடியைக் கண்டித்து கங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம்.
புதுச்சேரியில் நியமன எம்.ஏல்.ஏ.க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்த துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு கண்டனம் தெரிவித்து, புதுச்சேரி வில்லியனூரில் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி மாநில தலைவர் சாமிநாதன் உள்ளிட்ட மூவரை எம்.ஏல்.ஏ.க்களாக, மத்திய உள்துறை அமைச்சகம் நியமனம் செய்துள்ளது. ஆனால் இந்த மூன்று பேருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைக்க புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம் மறுத்தால், மூன்று பேருக்கு ஆளுநர் கிரண்பேடியே நேற்று முன்தினம் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதற்கும் கண்டனம் தெரிவித்தும், துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெறக்கோரியும், புதுச்சேரி மாநிலம் வில்லியனூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
கருத்துகள் இல்லை