குடிநீரில் கச்சா எண்ணெய் கலந்து வருவதால் மக்கள் அதிர்ச்சி.
தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் பைப் லைனில் கசிவு ஏற்பட்டு குடிநீருடன் கச்சா எண்ணெய் கலந்து வந்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். கடந்த மாதம் 30ஆம் தேதி ஓ.என்.ஜி.சி.யின் பைப் லைன்களில் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்ததால் போராட்டம் வெடித்தது.
இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட 9 பேரை விடுவிக்கக் கோரி கிராம மக்கள் கடந்த 6 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில் இன்று ஓ.என்.ஜி.சி.யின் மேலும் ஒரு பைப் லைனில் கசிவு ஏற்பட்டு குடிநீரில் கச்சா எண்ணெய் கலந்து வருகிறது. குடிநீர் எடுக்கச் சென்ற மக்கள், கச்சா எண்ணெய் கலந்து வருவதால் ஆத்திரமடைந்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.
கருத்துகள் இல்லை