வடகொரியா: ஏவுகணை சோதனை வெற்றி – உற்சாகக் கொண்டாட்டம்.
ஏவுகணை சோதனை வெற்றியை அடுத்து வடகொரியாவில் உற்சாகக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. அண்மையில் வடகொரியா ஏவிய கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை அமெரிக்காவின் அலாஸ்கா வரை சென்று தாக்கக் கூடிய திறனுடையது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏவுகணை வெற்றியைக் கொண்டாடும் வகையில் தலைநகர் பியாங்யாங்கில் மாபெரும் அணிவகுப்பு நடைபெற்றது. இதில் அரசின் உயர்மட்ட அதிகாரிகள், ராணுவவீரர்கள், ஏவுகணையை வடிவமைத்த விஞ்ஞானிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக வண்ணமிகு வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் பங்கேற்ற வண்ணமிகு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
கருத்துகள் இல்லை