சிரியா ஐஎஸ் பயங்கரவாதிகள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்.
சிரியாவில் செயல்பட்டு வரும் ஐஎஸ் பயங்கரவாதிகள் மீது ரஷ்யா ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் இருந்து ஏவுகணையை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. ரஷ்யாவில் இருந்து டபோலவ் 95 ரக விமானம் மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்ட கே ஹெச் 101 ஏவுகணை மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதில் ஐஎஸ் பயங்கரவாதிகளின் இருப்பிடம் தகர்க்கப்பட்டதாகவும் ரஷ்யா மேலும் தெரிவித்துள்ளது. ஹாம்பர்க் நகரில் நடைபெற்ற உள்ள ஜி20 மாநாட்டில் அமெரிக்க, ரஷ்ய அதிபர்கள் சந்தித்துப் பேச உள்ள நிலையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை