பிரெக்சிட் விவகாரம், பிரிட்டன் பிரதமர் ராஜினாமா.
ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பிலிருந்து விலகுவதற்கான பிரெக்சிட் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் ஒப்புதலை பெறமுடியாததால், பிரிட்டன் பிரதமர் தெரசா மே ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர், ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பிலிருந்து விலக பிரிட்டன் முடிவு செய்தது. ஆனால், அதற்கு பிரெக்சிட் என்னும் மசோதா கொண்டு வந்து நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெறவேண்டும். ஏற்கனவே ஒருமுறை 'பிரெக்சிட்' மசோதா ஓட்டெடுப்பில் தோல்வியை தழுவியிருந்தது.
இந்த முறையும் பிரெக்சிட் மசோதாவிற்கு ஒப்புதலைப் பெறமுடியாமல், சமீபத்தில் பிரிட்டன் மக்களவை தலைவர் ஆண்ட்ரே லேடன் பதவி விலகியிருந்தார். இந்தநிலையில், இதே பிரச்னை காரணமாக பிரிட்டன் பிரதமர் தெரசா மே, வரும் ஜூன் 7 அன்று ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார். பிரெக்சிட் விவகாரம், பிரிட்டன் உயரதிகாரிகள் பலரது பதவிகளையும் காலி செய்துள்ளது.
ஏற்கனவே ஐரோப்பிய கூட்டமைப்பு சார்பில், அதிலுள்ள நாடுகளின் அந்நியச் செலாவணி நாணயமாக 'யூரோ' எனும் பொதுவான நாணயம் அறிவித்து நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர், ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பிலிருந்து விலக பிரிட்டன் முடிவு செய்தது. ஆனால், அதற்கு பிரெக்சிட் என்னும் மசோதா கொண்டு வந்து நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெறவேண்டும். ஏற்கனவே ஒருமுறை 'பிரெக்சிட்' மசோதா ஓட்டெடுப்பில் தோல்வியை தழுவியிருந்தது.
இந்த முறையும் பிரெக்சிட் மசோதாவிற்கு ஒப்புதலைப் பெறமுடியாமல், சமீபத்தில் பிரிட்டன் மக்களவை தலைவர் ஆண்ட்ரே லேடன் பதவி விலகியிருந்தார். இந்தநிலையில், இதே பிரச்னை காரணமாக பிரிட்டன் பிரதமர் தெரசா மே, வரும் ஜூன் 7 அன்று ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார். பிரெக்சிட் விவகாரம், பிரிட்டன் உயரதிகாரிகள் பலரது பதவிகளையும் காலி செய்துள்ளது.
ஏற்கனவே ஐரோப்பிய கூட்டமைப்பு சார்பில், அதிலுள்ள நாடுகளின் அந்நியச் செலாவணி நாணயமாக 'யூரோ' எனும் பொதுவான நாணயம் அறிவித்து நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை